உனக்காக மட்டும் என் காதல் - 09

Vaagai Sooda Vaa
- - - - - - - - - - - - - - - - - -

யார் பேசினாலும்
உன் குரல்  கேட்கிறது
யாரை  பார்த்தாலும் 
உன் முகமே தெரிகிறது

காதல் நோய் 
முற்றி விட்டதாம்..
என்ன செய்யப்போகிறாய்..?
- - - - - - - - - - - - - - - - - -

தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய்
பொழிகிறது
காதல்..

துளியாய் சேர்ந்து  
கடலாய் போய்விட்டது 
ஆசைகள் ..!
- - - - - - - - - - - - - - - - - -

கற்பனை குளத்தில்
காதல் கல் எறிந்துவிட்டது..
கவிதைகள்
என் சுவாசமாகிவிட்டது...

உன்னை கண்டபின்
கற்பனைகள்கவிதையாய்
பெருக்கெடுக்கிறது...
- - - - - - - - - - - - - - - - - -

தனிமை இரவில்இரவுக் கவிதை
எழுதிடும் போது
காதலி நீ வருவாய்
கனவாக...!!

அது முடியும் பொழுதில்
விடியும் பகலில்
தினம் இருப்பாய் நீ
கவியாக...!!
- - - - - - - - - - - - - - - - - -

காதல்அழகான பொய்களை
சொல்ல பழக்கியது...

நான் சொல்லும் பொய்களையே
கவிதை என்கிறாய்...நீ..
- - - - - - - - - - - - - - - - - -