கவிதை...!!!



ஓரெழுத்து கவிதை
நீ...
ஈரெழுத்து கவிதை
நான்...
மூவெழுத்து கவிதை
காதல்...
நன்கெழுத்து கவிதை
உன் பெயர்....
                                                      ஜந்தேளுத்து கவிதை
                                                      என் பெயர்..

உன்னை காதலிக்கிறேன்....!!




என் நெஞ்சத்தில் மலர்ந்த
காதல் உறவே...!!
என் எண்ணத்தில் உதித்த
காதல் கவியே...!!
என் கனவினில் தோன்றிய
காதல் கனியே...!!
உன்னை காதலிக்கிறேன் நான்..

எந்தன் ராணி....!




என்
இதயத்தின்
ஆழத்தில்
வாசம்
செய்பவளே...
நீ தானடி
எந்தன்
ராணி......

உன் மூச்சு....!


என் மூச்சு
உன் இடை அசைவு...
என் உதட்டின் அசைவு
உன் பெயர்....
என் கண்ணசைவு...
உன் தலை அசைவு
என் இதயத்துடிப்பு
உன் மூச்சு....!!


உன் மூச்சு இல்லையேல்
இல்லை என் மூச்சு...

உன் உடலில்..!!


மழையில் நனைந்த
காலைப்பூ போன்ற
உன் உடலில் ..
நிலா போன்ற
முகம் உள்ளதடி பெண்ணே...


உன் நெற்றியில் உள்ள
சிறு போட்டு அந்த
நட்சத்திரம்.....

உனக்கு ஈடில்லை...!!


பூ...
மழை....
நிலா...
நட்சத்திரங்கள்..


இயற்கையின் அதிசயங்கள்
இவை ஒன்றும் உனக்கு
ஈடில்லை அன்பே...

நிஜத்திலும் உண்டு...!!


கவலைகள் இன்றிய வாழ்வு
கனவில் மட்டும் அல்ல
நிஜத்திலும் உண்டு


எம் வாழ்வு போல........

மகிழ்ச்சியின் படிகள்...!!


நட்பு என்னும் வெள்ளத்தில்
கை பிடித்த நாம்..
காதல் என்னும் வள்ளத்தில்
மிதக்கிறோம்..
எம் பயணத்தின் தடைகள்
ஒவ்வொன்றும் இனி
எம் மகிழ்ச்சியின் படிகள்...!

நீ பூ...!!






நீ பூ...!!
நான் வண்ணத்து பூச்சி..
உன்னை மட்டுமே
நான் சுற்றிக் கொண்டிருப்பேன்...
நீ வாடினால்
அன்று எனக்கு மரணம்...

தாங்க முடியாது என்பதால்...!!






உன்னை விட என் ஆயுள்
ஒரு நொடி குறைவு
அன்பே....
உன் பிரிவை என்னால்
தாங்க முடியாது என்பதால்...!

செல்லமே...!!





'நான் உங்களுக்கு தான்' என்று
நீ எனக்கு சொன்னதும்
உன்னுடன் ஓராயிரம் யுகங்கள்
வாழ்ந்ததாய் என்னுள்
பல கற்பனைகள் செல்லமே...!

அன்பே...!!



உந்தன் விம்பங்கள்
எந்தன் நெஞ்சத்தில்.....
உன் நினைவுகள்
என் இதயத்தில்....
உன் கனவுகள்
என் கண்களில்....
அன்பே....!!
உன்னால் சுழலுது என் உலகம்...

நீ என்னுள் இருப்பதனால்..




நான் என்னை கவனிப்பதில்லை
நீ என்னை கவனித்ததால்
என்னை கவனிக்க தொடங்கினேன்
நான் அழகனாகிவிட்டேன்....
அழகியே நீ என்னுள் இருப்பதனால்..

பூரிக்கின்றோம்...!!


உன் காதல் ஜெயித்ததால்
நீயும்....
என் வாழ்வு கிடைத்ததால்
நானும்...
எம் மனம் சேர்ந்ததால்
காதலும்...
எமை ஒன்றாய் இணைத்ததால்
கடவுளும்.... 
                                            பூரிக்கின்றோம்.

என் உறவு...!!



எனக்காக காத்திருக்கிறேன் என்றாய்...
என்னை காதலிக்கிறேன்
என்றும் சொன்னாய்..!!
நான் தான் உன் உறவென்றாய்...
நீயே என் உறவானாய்....

என் மனைவி...!!






காதல் ஒரு முறை வந்தது
காதல் மீண்டும் ஒரு முறை வந்தது...!!
வந்தவள் காதலி அல்ல
என் மனைவி...

என் உயிர் கவிதை ....




அன்பே
அழகெல்லாம்
அசந்து போகும்
அழகி நீயடி...!!





ஆருயிரே - என்
ஆயுள் - உன்
ஆயுளின்
ஆழத்தில் உள்ளதடி.....!!





இளையவளே
இனியவளே - உன்னால்
இனிமயனதடி
இன்று என் வாழ்வு...!!





ஈன்ற தாயின்
ஈகையும் - காதலை
ஈன்ற உன்
ஈகையும் எனக்கொன்று...!!


உ 


உயிரே என்
உயிராய்
உள்ளவளே என்
உயிரில் கலந்துவிட்டாய்...!!





ஊமை என்னை
ஊஞ்சலில் ஆடவைத்த என்
ஊதாப்பூவே நாம்
ஊர் போற்ற வாழ்வோம் வா...!!





எந்தன்
எதிர்காலம் நீ
என தெரியாமல்
என்னை இழந்துவிட்டேன்..!





ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது நீ வந்தாய்
ஏழை நான் உன்னால்
ஏழு உலகமும் பெற்றேன்...!!





ஜம் பூதம் ஆளும்
ஜநிலங்கள் வாழ்த்தும்
ஜம் பொறியோடு வரும் நீ என்
ஜம் புலனில் உலவுகிறாய்....!!





ஒருவனுக்கு
ஒருத்தியாய் வாழ்வோம்
ஒரு நாள் வருவாள் 
ஒளியாக எம் பிள்ளை...!!





ஓவியமே உன்னை எண்ணி
ஓயாமல்
ஓடி என் இதயம்
ஓய்வின்றி துடிக்கிறது...!!


ஒள


ஒள என கௌவிடும்
ஒளடவ ராகமே
ஒளவையின் தமிழே
ஒளடதமதடி உன் அன்பு...!!