1
எத்தனையோ காதல்கள்
என்மேல் - எனக்கு
உன்மேல் மட்டுமே காதல்..
--------2
முட்கள் நிறைந்த
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??
------
நீல வானத்தில்
நிலவினை போல - என்
நீள கனவினில் நீயடி..
-----------
4
காதல் தேசத்து
அகதி நான்..
உன் காதலன் என்று
கைது செய்தாய்..
சிறை எனக்கு அல்ல
உனக்கு
என் இதயத்தில்...!!
----------
5
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
உன் கண்களில் தான்....
------
6
என் கிறுக்கலை கவிதை
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...
---------
7உந்தன் புன்னகையே
எந்தன் முகவரி....
அதனால் தான் என்னவோ
நான் தொலையாமல்
இருக்கிறேன்....
----------
8
இரவினில் கூட
உன்னைப்பார்க்கிறேன்...
கண்களால் அல்ல
கனவுகளால்....
----
9
என் ஆதிமுதல்
அந்தம் வரை
உனக்கு அத்துப்படி
அது எப்படி...
என் ரகசிய உலகத்தின்
அரசியா நீ?
--------------
10
துடைத்துவிடு...
தங்கத்தில் இருந்து முத்தென்று
தங்க வியாபாரிகள்
வரப்போகிறார்கள்...
-----
11
பூக்கள் உன்னை பார்த்து
பேசிக்கொள்கின்றன
தினம் நாம் பூத்து
உதிர்கிறோம்
இவள் உதட்டில்
உதிர்ந்தால்
பூத்துவிடலாம் என்று..
----------
12
சூரியனை மட்டும்
சுற்றும்
சூரிய காந்தி போல்
உன்னை மட்டுமே
நான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்...
----------
13
காதல் மோட்சம்
அடைவதற்காய்
என்னிடம் உள்ள
ஒரே மந்திரம்....
உன் பெயர் தான்...
-----
14
உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்று கண்டு பிடிப்பதற்குள்
கூடிக்கொண்டே போகிறது
உன்மேலான என் காதல்....
------
15
இதயத்தை தொலைத்துவிட்டு
தேடினேன்
கிடைக்கவில்லை...
இதயமே என்னை
தேட தொடன்கியது...
உன் காதல் வந்தபிறகு..
----
16
காகிதங்களை காலம்
தின்றுவிடும் என்பதால்..
உன் நினைவுகள் எல்லாம்
என் மன டைரியிலே...
தின்றுவிடும் என்பதால்..
உன் நினைவுகள் எல்லாம்
என் மன டைரியிலே...
------
17
தினமும் இரவில்
தோற்றுப்போகிறேன்...
கனவில் வரும் - உன்
நினைவு போராட்டங்களுடன்
போராடி...
-----
18
உனக்கு நான்...
எனக்கு நீ...
நமக்கு நாம் ..
இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!
-----
எனக்கு நீ...
நமக்கு நாம் ..
இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!
-----
19
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்
என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...
------
20
நீ
தனிமையை விரும்புகிறாய்
நான்
தனிமைப்படுத்தப்படுகிறேன்..
நாம்
சேர்ந்ததால் தனிமை
தனிமையாகி விட்டது போலும்...
-----
21
காற்றின் உருவம்
தெரிவதில்லை...
உன் காதலில்
குறையை கண்டதில்லை...
----
22
என் வார்த்தைகள்
எல்லாம் மௌனவிரதம்
இருக்கின்றன..
நாம் கண்களால்
கதைத்து விடுவதால்...
----
23
உன் உதடுகளில் தான்
என் புன்னகை
மலர்கிறது...
கண்களில் கண்ணீர்
வராதவரை....
----
24
எனக்கு மனைவியாக----
23
உன் உதடுகளில் தான்
என் புன்னகை
மலர்கிறது...
கண்களில் கண்ணீர்
வராதவரை....
----
24
(வர) தட்சணை
எவ்வளவு கேட்பாய்...??
25
முத்திரையாக
இதயத்தை ஒட்டி...
காதல் கடிதங்களாக
கவிதைகளை அனுப்புகிறேன்....
உன் பதில் என்ன
காதல் தானே...?