
மௌன மொழிகளை
கற்றுக்கொண்டு இருக்கிறேன்
உன்னுடன் பேசுவதற்காய்..
மௌனத்தில் உவமைகளை
தேடுகிறேன்..
உன்னை பற்றி எழுத..
உன்னை பற்றி எழுதினால்
கவிதை என்கிறாய்
மௌனமாக...
நான் எழுதும்
கவிதைகளின்
தலைப்புக்கள் எல்லாமே
உன் மௌனம் தானே..
மௌன மொழிகளின்
பொருள்ச்சிறப்பு
நீ புன்னகைப்பது...
உன் புன்னகையை
பார்த்ததால் மௌனமே
மௌனமாகிவிட்டது...
நான் எத்தனை
கேள்வி கேட்டாலும் நீ
சொல்லும் ஒரே பதில்
மௌனம் தானே ....
எப்படி நீ மௌனமாக
இருக்கிறாய்
மௌனம் என்ன
உன் தாய்மொழியா..??
அதனால் தான் என்னவோ
உன் மௌனத்தை பார்த்தே
எனக்கு
உன் மேல் காதல்...
by sTn